தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்கள் சம்பள உயர்வு குறித்து, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்த, ஏழு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, சம்பளம் மாற்றி அமைக்கப்படும். அதன்படி, 2015 டிச., 1 முதல், புதிய சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
இதற்காக, அ.தி.மு.க., - தி.மு.க., - கம்யூ., - காங்., உள்ளிட்ட, 16 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.மேலும், மின் வாரிய நிதி, மின் பகிர்மானம், மின் உற்பத்தி பிரிவு இயக்குனர்கள், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக நிர்வாக இயக்குனர், செயலர், தலைமை பொறியாளர் - பெர்சனல், தலைமை நிதி அலுவலர் ஆகியோர் அடங்கிய, ஏழு பேர் குழுவை மின் வாரியம் நியமித்துள்ளது.எத்தனை பேர்? : தமிழ்நாடு மின் வாரியத்தில், கள உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர்என, 88 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.சம்பள உயர்வு வழங்க வேண்டிய காலக்கெடு முடிந்த பின் தான், பேச்சு நடத்தவே குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு, தொழிற்சங்கங்களுடன் உடனடியாக பேச்சு நடத்தி, சம்பளம் உயர்வு அறிவிப்பை, விரைவில் வெளியிட வேண்டும்.சுப்ரமணியம், பொதுச் செயலர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு-
Feb 11, 2016
Home
kalviseithi
சம்பள உயர்வு குறித்து பேச 7 பேர் குழு அமைப்பு
சம்பள உயர்வு குறித்து பேச 7 பேர் குழு அமைப்பு
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி