எச்சரிக்கை... எச்சரிக்கை... ஜாக்டோவிற்கு எச்சரிக்கை..!!! திராணி இழந்துவிட்டதா நம் ஜாக்டோ பேரமைப்பு...???? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2016

எச்சரிக்கை... எச்சரிக்கை... ஜாக்டோவிற்கு எச்சரிக்கை..!!! திராணி இழந்துவிட்டதா நம் ஜாக்டோ பேரமைப்பு...????

எச்சரிக்கை... எச்சரிக்கை...
 ஜாக்டோவிற்கு எச்சரிக்கை..!!!

திராணி இழந்துவிட்டதா நம் ஜாக்டோ பேரமைப்பு..

மாற்றுத்திறனாளிக்கு உள்ள திராணி கூடவா ஜாக்டோவிற்கு இல்லை...????


கடந்த மூன்று நாட்களாக மாற்றுத்திறனாளிகள் செய்த தொடர் மறியலால் அரசு நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் பட்ஜெட்டில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்றது..

கூட்டம் முடிந்து வெளியே வந்த மாற்றுத்திறனாளிகள்.. பட்ஜெட்டில் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் கோட்டையை நோக்கி தொடர் முற்றுகை செய்வோம் என்று ஆவேசமாக அந்த இடத்திலேயே பத்திரிக்கையாளர்களிடம் அரசுக்கு எச்சரிக்கை செய்துவிட்டு களைந்தனர்..

(இப்படியல்லவா அரசை எச்சரித்து விட்டு வந்திருக்கனும் நம் ஜாக்டோ பேரமைப்பு...ஆனால், பண்ணியதா அதை)

16-ம் தேதி பட்ஜெட்டில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் காலவறையற்ற வேலைநிறுத்தம் செய்வோம் என்று அரசுக்கு எச்சரித்துவிட்டு வர ஜாக்டோவிற்கு ஏன் இவ்வளவு தயக்கம்...????

தயக்கமா....
இல்லை, கூட்டமைப்பின் மீது உள்ள நம்பிக்கையின்மையா..????

2002-களில் இருந்த உங்களின் வேகம் தற்பொழுது எங்கேபோனது...????

நாங்கள் அகலபாதாளத்தின் விளிம்பில்  தவிக்கும் போது கூட..., 
நீங்கள் பொங்கி எழாததன் மர்மம் தான் என்ன......??????

பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு நமக்கு வெறும் 13 நாட்கள் மட்டுமே உள்ளன..
அதன்பின் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள்,
அதன் பிறகு வெறும் கண்துடைப்பு நாடகத்தை மட்டும் அரங்கேற்றலாம் என்ற எண்ணமோ...????

16-ம் தேதி ஏமாற்றப்பட்டோம் என்றால் அடுத்தகட்ட போராட்டத்தை 17-ம் தேதி அறிவிப்போம் என்று கூறியுள்ளீர்களே...????

தொடர்வேலைநிறுத்தின் தேதியை 17-ம் தேதி அறிவிப்போம் என்று கூற கூடவா திராணியை இழந்தது ஜாக்டோ பேரமைப்பு...????

17-ம் தேதி கோட்டையை நோக்கி தொடர் முற்றுகையிடுவோம் என்று அறிவித்து எங்களின் கோரிக்கைகளை கேளிக்கை ஆக்கிவிடாதீர்கள்..
(உங்க பொங்கச் சோறும் வேண்டாம் .. பூசாரித் தனமும் வேண்டாம்)

நேற்று அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை முடிந்து...
கீழே படி இறங்கிவரும்போதே TNPTF -ன் பொதுச்செயலாளர் பாலச்சந்தர் அவர்கள் உடனடியாக நாளைய (10.02.16) அரசு ஊழியர்கள் நடத்தும் வேலைநிறுத்தத்தில் ஆதரவு தெரிவித்து நாமும் களம் இறங்கலாம் என்றாராமே...???

ஆனால் , அதற்கு மற்ற சங்க நிர்வாகிகளோ... உயர்திரு.பன்னீர்செல்வம் அவர்கள் கூறியதால் பட்ஜெட் வரை காத்திருக்கலாம் என்றார்களாமே......????

(திரு.பாலச்சந்தருக்கு மட்டும் ஏன் பாதிக்கப்பட்டவர்கள் மீது இவ்வளவு அக்கரை...????

அவர் என்ன 2800 ஊதியக்கட்டில் உள்ளவரா...?????

இல்லை, CPS-ஆல் பாதிக்கப்பட்டவரா...????)

நாங்கள் போராட வேண்டியது அரசுடன் இல்லை...
நாங்கள் சார்ந்துள்ள இயக்கத் தலைமைகளிடம் தான் என்று மீண்டும் மீண்டும் உணர்த்திவிட்டீர்கள்..

ஜாக்டோஜியோ-வாக விஸ்வரூபம் எடுத்திருக்க வேண்டிய நமது போராட்டத்தை பிசுபிசுக்கச் செய்துவிட்டீர்களே....????
(இதில் என்ன சூழ்ச்சியோ..!!! )

தொடர்வேலை நிறுத்தத்தை நீங்கள் விரைவில் அறிவிக்க தவறினால்....!!!

எச்சரிக்கை... எச்சரிக்கை...
 ஜாக்டோவிற்கு எச்சரிக்கை..

ஜாக்டோவில் உள்ள பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை அனைத்து சங்கங்களும் இழக்க நேரிடும் என்பதை பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக எச்சரிக்கின்றேன்.....

அதற்கு அச்சாரம் தீட்டுவதைப் போல் உள்ளது ஜாக்டோவின் தொடர் அலட்சியப் போக்கு....

-இவண்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன்,
தேவராஜன்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி