அரசுக்கு சாதகமாக ஜாக்டோ செயல்படுகிறது- தினகரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2016

அரசுக்கு சாதகமாக ஜாக்டோ செயல்படுகிறது- தினகரன்

போராடு
இல்லை போராட வழிவிடு

சங்க வேறுபாடு கடந்து அனைத்து இடைநிலையாசிரியர்களும் Facebook மற்றும் WhatsApp-ல் தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்துவது ஜேக்டோ பொறுப்பாளர்களுக்கு சேரவில்லையா...? 

இல்லை அதற்கு நீங்கள் செவிசாய்க்கவில்லையா...?

மேலிருந்து கீழ் பரவுதல் என்பது அதிகாரம்...
கீழிருந்து மேலே பரவுதல் என்பது அங்கிகாரம்...

இதில் TNPTF இரண்டாவது வகை.

அடிமட்ட உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு இடமளித்து தொடர் போராட்ட களமிறங்கியுள்ளது.

முடிந்தால் அதிகார 
வர்க்கத்தை மோதிப்பார்..
இல்லையேல் எங்களை
வேடிக்கை பார்...

TNPTF நவம்பர் மாதம் முதல் தோடர்வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஜாக்டோவிற்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறது..
ஆனால், இதுவரை அதற்கு ஜாக்டோ ஒத்துழைக்கவில்லை..

2002-ல்  தொடர் வேலை நிறுத்தத்தை TNPTF முன்னின்று நடத்தியது. பெரிய சங்கங்கள் எல்லாம் ஓடி ஒழிந்து கொண்டன. 
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியுடன் அந்த சங்களின் ஆசிரியர்களும் பள்ளியை இழுத்து மூடியதால், அந்த சங்கங்களின் மாநில நிர்வாகம் போராடும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டது என்பது வரலாறு சொல்லும் உண்மை.

நண்பர்களே...
போற்றுவோர் போற்றட்டும்
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் புறம் தள்ளி களம் காணுங்கள்

கதை சொல்லியே பழக்கப்பட்டவர்களுக்கு விளக்கம் சொல்லி காலத்தை வீணாக்காதே..

இன்னல்படும் இடைநிலை ஆசிரியர்கள் இன்முகம் காண இடைவிடாது உழைப்போம்..

நண்பர்களது விமர்சனம்
நம்மை வீரியப்படுத்தட்டும்..

அமைச்சரவை அளவிலான 
பேச்சு வார்த்தைக்கு பின்னால்
அடுத்த கட்ட போராட்டத்தை அவ்விடத்திலேயே அறிவிக்காதது ஏன்? என்ற கேள்விக்கு பதில் இல்லை இதுவரை...

வேண்டாம் நண்பர்களே
கடந்த கால 750க்கு மஞ்சள் துண்டு போர்த்தியது போல்
தற்பொழுது ஏதாவது 500க்கு பச்சை ஆடை 
அணிவிக்க தயாராகி விட்டதா ஜேக்டோ....???

என்ற என்னைப் போன்ற அப்பாவி ஆசிரியரின் உணர்வை உணர்ந்து வேலைநிறுத்த போரை
அறிவித்து அரசுக்கு நமது அழுத்தத்தை கொடுத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை வணங்குகிறேன்.

-இவண்
பாதிக்கப்பட்ட ஆசிரியன்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி