தேர்வுத் தாள் திருத்துவோரின் விவரங்களை, தகவல் உரிமைசட்டத்தின் கீழ் பிறருக்கு தெரிவிக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.கேரள மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் எழுதப்பட்ட விடைத் தாள்களை திருத்தியோர் விவரங்களை, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தரக் கோரி, கேரள ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவைவிசாரித்த கேரள ஐகோர்ட், திருத்தியோர் விவரங்களை வெளியிட உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், கேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மேல் முறையீடு செய்தது.மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், எம்.ஒய்.இக்பால், அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்வு விடைத்தாள்களை திருத்தியவர்கள் பற்றிய தகவல்களை, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிடத் தேவையில்லை என, உத்தரவிட்டனர்.
Feb 10, 2016
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி