தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு விளையாட்டுத் துறையின் கீழ் செயல் பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் மூலமாக கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்காக சிறப்பு விளையாட்டு விடுதிகள் சென்னையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.2016-17-ம் ஆண்டுக்கான சிறப்பு விளையாட்டு விடுதியில் சேருவதற்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர்கள் தடகளம், கூடைப்பந்து, குத்துச் சண்டை, கையுந்து பந்து, டேக்வாண்டோ, நீச்சல், வாள் சண்டை, துப்பாக்கி சுடுதல், பளு தூக்குதல், ஜூடோ, இறகுப் பந்து, மேசைப் பந்து மற்றும்மாணவி களுக்கு தடகளம், குத்துச்சண்டை, கையுந்து பந்து, கால்பந்து, டேக்வாண்டோ, நீச்சல், வாள் சண்டை, துப்பாக்கிச் சுடுதல், பளு தூக்குதல், ஜூடோ, இறகுப் பந்து, மேசைப் பந்து ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த விடுதியில் சேர மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் சம்பந்தப்பட்ட விளையாட்டில்மாநில அளவில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவங் கள் www.sdat.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 18-ம் தேதிக்குள் சிறப்பு நிலை விளையாட்டு விடுதி, அறை எண் 76, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை-3 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவும். தேர்வு வரும் 20, 21-ம் தேதிகளில் நடைபெறும்.
Feb 2, 2016
Home
kalviseithi
அரசு விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
அரசு விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி