' தமிழ்நாடு மின் வாரியம், எலக்ட்ரிக்கல், 300; சிவில்,50; மெக்கானிக்கல், 25 என, 375 உதவி பொறியாளர் பணியிடங்களை, எழுத்து மற்றும் நேர்முக தேர்வு மூலம் நியமிக்க முடிவு செய்துள்ளது. ஜன., 31ல், எழுத்து தேர்வு நடந்தது; ஒரு லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகள்தேர்வெழுதினர்.
எழுத்து தேர்வு முடிவுகள், அண்ணா பல்கலையிடம் உள்ளது. ஆனால், உதவி பொறியாளர் தேர்வு குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், தேர்வு முடிவை வெளியிட, காலதாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நேர்முக தேர்வை, மத்திய மின்சார ஆணையம் நடத்த கோரிக்கை எழுந்துள்ளது. எரிசக்தி துறை அதிகாரி கூறியதாவது:உதவி பொறியாளர் நியமனத்தில், எழுத்து தேர்வுக்கு, 85 மதிப்பெண்; நேர்முக தேர்விற்கு, 15 மதிப்பெண். மின் வாரிய தலைவர் சாய்குமார் எடுத்த முயற்சியால் எழுத்து தேர்வு, அண்ணா பல்கலை மூலம் நியாயமாக நடந்துள்ளது. ஆனால், நேர்முக தேர்வை, மின் வாரிய அதிகாரிகள் தான் நடத்துவர். இதில், அரசியல் சிபாரிசு உடையவர்களுக்கு அதிக மதிப்பெண் கொடுக்க வாய்ப்புள்ளது. எனவே, நேர்முக தேர்வை, வெளிநபர்கள் அதாவது, மத்திய மின்சார ஆணையம் போன்ற அதிகாரிகள் மூலம் நடத்த வேண்டும். அப்போது தான், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
Feb 13, 2016
Home
kalviseithi
'உதவி பொறியாளர் தேர்வை மத்திய ஆணையம் நடத்தணும்
'உதவி பொறியாளர் தேர்வை மத்திய ஆணையம் நடத்தணும்
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி