'நுாறு சதவீத தேர்ச்சிக்காக, மாணவர்களுக்கு மாற்று சான்றிதழான, டி.சி.,யை கொடுத்து வெளியேற்றினால், தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என,பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரித்து உள்ளார்.அரசு பள்ளிகளில், இந்த ஆண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி காட்ட வேண்டும் என, கல்வித் துறை அதிகாரிகள்அறிவுறுத்தி உள்ளனர்.
அதன்படி, பாடம் நடத்த அறிவுரைகள் வழங்கப்பட்டன.ஆனால், இதை தவறாக புரிந்து கொண்ட பல தலைமை ஆசிரியர்கள், 100 சதவீத தேர்ச்சிக்காக, நன்றாக படிக்காத மாணவர்களை, தேர்வுக்கு முன்பே, டி.சி., கொடுத்து வெளியேற்றும் நிலை உள்ளது.விருதுநகர் மாவட்டம், எஸ்.அம்மாபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, நான்கு ஆண்டுகளாக, 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது.
இந்த பள்ளியில், 10ம் வகுப்பில் நன்றாக படிக்காத, எட்டு மாணவர்களுக்கு கட்டாயமாக, டி.சி., கொடுத்து அனுப்பியதாக, மாணவர்களின் பெற்றோர் புகார்அளித்தனர்.இதையடுத்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவின்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரணை நடத்தி, மாணவர்கள் மீண்டும் பள்ளியில்சேர்க்கப்பட்டனர்.இதை தொடர்ந்து, அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், 'படிக்காத மாணவர்களை, 100 சதவீத தேர்ச்சி நோக்கத்தில், கட்டாய டி.சி., கொடுத்து அனுப்ப கூடாது. மாறாக, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, நல்ல மதிப்பெண் பெற வைக்க வேண்டும். டி.சி., கொடுப்பதாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்து உள்ளார்.
Feb 14, 2016
Home
kalviseithi
கட்டாய டி.சி., வழங்கினால் எச்.எம்.,கள் மீது நடவடிக்கை பாயும்
கட்டாய டி.சி., வழங்கினால் எச்.எம்.,கள் மீது நடவடிக்கை பாயும்
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி