JACTTO-GEO ஸ்டிரைக்கில் பங்கேற்க மாட்டோம்: அலுவலர் ஒன்றியம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2017

JACTTO-GEO ஸ்டிரைக்கில் பங்கேற்க மாட்டோம்: அலுவலர் ஒன்றியம் அறிவிப்பு

''ஜாக்டோ- ஜியோ சார்பில் நடக்கும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில்
பங்கேற்க மாட்டோம்,'' என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் சண்முகராஜன் தெரிவித்தார்.

அவர் சிவகங்கையில் கூறியதாவது:
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து; ஊதிய முரண்பாடுகளை களைந்து, புதிய ஊதியக்குழு மாற்றத்தை செயல்படுத்துவது; தொகுப்பூதியம் ரத்து உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மே 14 ல் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்தோம்.

இதையடுத்து ஜூலை 28ல் முதல்வர் எங்களை அழைத்து பேசினார். செப்.30க்குள் ஊதியக்குழு மாற்ற பரிந்துரை செயல்படுத்தப்படும்; வல்லுனர் குழு பரிந்துரை அடிப்படையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் முடிவெடுக்கப்படும் என, உறுதியளித்தார். செப்., 30 வரை எந்த போராட்டத்திலும் பங்கேற்பதில்லை என, முடிவு செய்துள்ளோம்.

இதனால் ஜாக்டோ ஜியோ சார்பில் செப்., 7 முதல் நடக்கும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம். எங்களிடம் உறுதியளித்தபடி கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் அக்.2ல் கன்னியாகுமரியில் இருந்து எழுச்சிப் பயணம் மேற்கொள்வோம். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஊர்வலம் நடக்கும். தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், செயலாளர் ரமேஷ்கண்ணன் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி