அசாம் : பணிக்கு 30 நிமிடம் முன்னதாக வர வேண்டும் - அரசு ஊழியர்களுக்கு உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2017

அசாம் : பணிக்கு 30 நிமிடம் முன்னதாக வர வேண்டும் - அரசு ஊழியர்களுக்கு உத்தரவு!

'அரசு ஊழியர்கள், அலுவலகத்துக்கு தாமதமாக வரும் கலாசாரத்துக்குமுற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இனி, 30 நிமிடத்துக்கு முன்னதாகவே வர வேண்டும்' என, அசாம் அரசு உத்தரவிட்டு உள்ளது.
அசாமில், முதல்வர் சர்பானந்த சோனவால் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், முதல்வர் சோனவால் பேசுகையில், 'நம் நாட்டில், அசாமில் தான், சூரியன் முதலில் உதயமாகிறது.

அரசு ஊழியர்கள், பணிக்கு முன்னதாகவே வர வேண்டும்.'மக்களை காத்திருக்க வைத்திருக்கக் கூடாது; தாமதமாக வரும் கலாசாரத்தை மாற்றி, வருங்கால தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்' என்றார்.இந்நிலையில், அசாம் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், அரசு ஊழியர்களின் பணி நேரம், காலை, 10:00 மணிக்கு பதிலாக, 9.30 மணிக்கே துவங்கும் என, முடிவெடுக்கப்பட்டது.

பணி முடியும் நேரம், மாலை, 5.00 மணி என்பதில், எந்த மாற்றமும் இல்லை. இந்த மாற்றம், ஜன., 1 முதல் அமலுக்கு வருகிறது. அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ள அரசு ஊழியர் சங்கங்கள், 'இந்த உத்தரவை, ஊழியர்கள் மட்டுமின்றி, அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும்' என்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி