'புதிய பாட புத்தகத்தில் சர்ச்சை கருத்து கூடாது!' - தமிழக பள்ளிக் கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2018

'புதிய பாட புத்தகத்தில் சர்ச்சை கருத்து கூடாது!' - தமிழக பள்ளிக் கல்வித்துறை

புதிய பாடப் புத்தகத்தில், சர்ச்சையான கருத்துகள் மற்றும் பிழைகள் இருக்கக் கூடாது என, பாடத்திட்ட குழுவுக்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின், பாடத்திட்டம் மாற்றப்படுகிறது.அதேபோல், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 13 ஆண்டுகளுக்கு பின், பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. இதற்காக, அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தரான, அனந்தகிருஷ்ணன் தலைமையிலான, கலைத்திட்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் நேரடி பார்வையில், புதிய பாடத்திட்ட பணிகள் நடந்து வருகின்றன.வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அறிமுகமாகிறது. அதற்கான புத்தகங்கள் எழுதும் பணிகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு, முதல் பருவ புத்தகங்கள் மட்டும், அச்சிடுவதற்கு தயார் நிலையில் உள்ளன.இந்நிலையில், பாடத்திட்ட குழுவுக்கு, தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் மற்றும் செயலர், பிரதீப் யாதவ் ஆகியோர், வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளனர்.

'புதிய பாடத் திட்டத்தில், கலைத் திட்டத்தை மீறாமல், தமிழக அரசின் அரசாணைக்கு உட்பட்டு,பாடங்களை எழுத வேண்டும். எழுத்து மற்றும் பொருள் பிழைகள் ஏற்பட்டு விடக் கூடாது. வரலாறு, புவியியல் போன்ற பாடங்களில், ஆண்டு, எல்லை, குறிப்பிட்ட இனத்தவரின் வரலாறை சொல்லும் விதம் போன்றவற்றில், எந்தவித சர்ச்சையான, பாரபட்சமான கருத்துகள் இடம்பெறக்கூடாது' என, அறிவுறுத்தி உள்ளனர்.

1 comment:

  1. 2014 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க தேனி குமார் 9791565928

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி