அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு விண்ணப்பிக்க பெண்கள் பழகுநர் உரிமம் பெற வசதியாக, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் (ஆர்டிஓ) இன்று செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள் ளது.
பணிபுரியும் பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 5-ம் தேதிக்குள் மேற்கூறிய இடங்களில் அளிக்கலாம்.இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பெண்கள் ஓட்டுநர் அல்லது பழகுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். இதனால் ஆர்டிஓ அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:அம்மா இரு சக்கர வாகன திட்டத்துக்கு விண்ணப்பிக்க பழகுநர் உரிமம் பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பெண்கள் அதிக அளவில் வருகின்றனர். எனவே, இதனைக் கருத்தில் கொண்டு பழகுநர் உரிமம் பெற வசதியாக 3-ம் தேதி (இன்று) அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் செயல்படும். மேலும், பழகுநர் உரிமம் வழங்குவது தவிர்த்து மற்ற பணிகள் ஏதும் ஆர்டிஓ அலுவலகங்களில் இன்று நடைபெறாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிபுரியும் பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 5-ம் தேதிக்குள் மேற்கூறிய இடங்களில் அளிக்கலாம்.இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பெண்கள் ஓட்டுநர் அல்லது பழகுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். இதனால் ஆர்டிஓ அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:அம்மா இரு சக்கர வாகன திட்டத்துக்கு விண்ணப்பிக்க பழகுநர் உரிமம் பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பெண்கள் அதிக அளவில் வருகின்றனர். எனவே, இதனைக் கருத்தில் கொண்டு பழகுநர் உரிமம் பெற வசதியாக 3-ம் தேதி (இன்று) அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் செயல்படும். மேலும், பழகுநர் உரிமம் வழங்குவது தவிர்த்து மற்ற பணிகள் ஏதும் ஆர்டிஓ அலுவலகங்களில் இன்று நடைபெறாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி