ஏர்செல் சேவை முடக்கம்: வோடபோனுக்கு மாறிய 10 லட்சம் வாடிக்கையாளர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2018

ஏர்செல் சேவை முடக்கம்: வோடபோனுக்கு மாறிய 10 லட்சம் வாடிக்கையாளர்கள்

ஏர்செல் நிறுவனம் திவால் நோட்டீஸ் அளித்துவிட்டதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் 10 லட்சம் பேர் வோடபோன் நிறுவனத்துக்கு மாறிவிட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான கடன் நெருக்கடி காரணமாக முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் தேசிய கடன் தீர்ப்பாயத்தில் திவால் மனுத் தாக்கல் செய்தது. இதை அந்த தீர்ப்பாயமும் ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மாறிக்கொள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கு நிறுவனமான டிராய் கால அவகாசம் அளித்தது.இதில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கானோர் தங்கள் செல்போன் எண்ணை போர்டல் முறையில் பிஎஸ்என்எல், ஏர்டெல் நிறுவனத்துக்கு மாறினர். இந்நிலையில், தமிழகத்தில் 4ஜி நெட்வொர்க்கை மேம்படுத்த வோடபோன் நிறுவனம் தீவிரப்படுத்தி வருகிறது.இதற்காக ரூ.400 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது.

இதனால், ஏர்செல் நிறுவனத்தின் திவால் அறிவிப்புக்குப் பின், வோடவோன் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 10 லட்சம் பேர் மாறியுள்ளதாக வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஏர்செல் வாடிக்கையாளர்கள் நாள்தோறும் அதிகமான எண்ணிக்கையில் வந்து கொண்டு இருப்பதால், அவர்களுக்கு சேவை எளிதாகவும், தங்குதடையின்றி கிடைக்கும் வகையில், வோடபோன் சில்லரை வர்த்தக மையங்களை வாரத்தின் 7 நாட்களும் திறந்துவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி