ஈரோடு, சம்பத் நகரில் உள்ள டிஜிட்டல் நுாலகத்தில், மாவட்டநுாலக ஆணைக்குழு சார்பில், யு.பி.எஸ்.சி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி.,போன்ற போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையத்தை திறந்துவைத்து, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:நீட் தேர்வுக்கான412 மையங்களில், 312 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.70ஆயிரத்து, 439 மாணவர்கள், இங்கு பதிவு செய்துள்ளனர். மொத்தம்,72 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெறுவர் என, எதிர்பார்க்கிறோம்.கூடுதலாக மாணவர்கள் வந்தாலும், தேவையான நடவடிக்கைஎடுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள, 32 மாவட்ட தலைமை நுாலகத்திலும், நீட்,யூ.பி.எஸ்.சி., - டி.என்.பி.எஸ்.சி., போன்ற மத்திய, மாநில அரசுகளின்போட்டி தேர்வுகளுக்கு தேவையான அனைத்து பயிற்சியும், இலவசமாகவழங்கப்படுகிறது. இங்கும், ஏழை மாணவர்கள், பதிவு செய்து, நீட்தேர்வு பயிற்சியை பெறலாம். நீட் தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுக்கானபுத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க, 400 கோடி ரூபாய்ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையானால் கூடுதல் நிதி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு - நீலகிரி இடையே விரைவில் 4 வழிச்சாலை : ''ஈரோட்டில்இருந்து நீலகிரிக்கு விரைவில், நான்கு வழிச்சாலை அமைக்கப்படும்.இதன் மூலம், விபத்துகள் குறையும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன்தெரிவித்தார்.ஈரோட்டில் அவர் கூறியதாவது: தமிழகத்தில், தேவையான இடங்களில்,நான்கு வழிச்சாலையும், இரு வழிச்சாலையும் அமைக்கப்படுகிறது.ஈரோட்டில் இருந்து, நீலகிரி வரை, விரைவில் நான்கு வழிச்சாலைஅமைய உள்ளது. இதற்கான திட்ட வரைவு தயாரித்து, நிதிஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், பாதுகாப்பான பயணத்துடன்,விபத்துகள் குறையும்.இப்பகுதி மக்களின் நீண்ட கால கனவான,அத்திக்கடவு - அவினாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.இதற்காக, 1, 289 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
This comment has been removed by the author.
ReplyDelete400 கோடியா???
ReplyDeleteப்பா....
என்ஜாய் தல...
oooooooooooooo oooooooooooooooooo ooooooooooooooooooooooooooooooooooooooooooooooh
Delete