உதவி வன பாதுகாவலர் பதவி முதன்மை எழுத்து தேர்வு ஜூலை 28ல் தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2018

உதவி வன பாதுகாவலர் பதவி முதன்மை எழுத்து தேர்வு ஜூலை 28ல் தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

உதவி வன பாதுகாவலர் பதவிக்கான முதன்மை எழுத்து தேர்வு ஜூலை 28ம் தேதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி ஒருங்கிணைந்த குடிமைப்பணி குரூப் 1ஏல் அடங்கிய உதவி வனப்  பாதுகாவலர் பதவிக்கான 14 காலிப்பணியிடங்களுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வை நடத்தியது.

இத்தேர்வில் 10,459 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர். விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான  அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட 472 விண்ணப்பதாரர்களின்  பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வு ஜூலை  28ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி