பி.இ., - பி.டெக்., படிப்பு களில் சேர, தமிழக அரசு சார்பில், ஒற்றைச்சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் வீட்டில் இருந்தபடி அல்லது அந்தந்த மாவட்ட உதவி மையங்கள் வாயிலாக, கணினி வழி ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் பதிவு, மே, 3ல் துவங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது. ஆனால், அறிவிக்கையில் இடம் பெற வேண்டிய கவுன்சிலிங் விதிகள் உள்ளிட்ட, மற்ற விபரங்கள் இடம் பெறவில்லை. கவுன்சிலிங் விதிகள் குறித்த விபரங்கள், வரும், 2ம் தேதி வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.
வழக்கமாக, அறிவிக்கை வெளியிடும் போது, அதில் அனைத்து விபரங்களும், விதிகளும் இடம்பெறும். அதை பின்பற்றி, கவுன்சிலிங் பதிவுக்கு தேவையான ஆவணங்களை, மாணவர்கள் முன்கூட்டியே தயார் செய்வர்.ஆனால், இந்த ஆண்டு, முதல் முறையாக, ஆன்லைன் கவுன்சிலிங்குக்கு மாறுவதால், விதிகளை இறுதி செய்வதில், உயர்கல்வித் துறைக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஏற்கனவே அமைச்சரும், செயலரும் அறிவித்த கவுன்சிலிங் தேதி மற்றும் ஆன்லைன்பதிவு தேதி மட்டுமே, அறிவிக்கையாக வெளியிடப்பட்டு உள்ளது. 'மற்ற விபரங்கள், மே, 2ல் நிச்சயம் வெளியாகும்'என, அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் குழுவினர் தெரிவித்தனர்.
அறிக்கை விபரம்:
ReplyDeleteகடந்த அதிமுக ஆட்சியில் 2013 ம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் தமிழக அரசு ஆசிரியர் தகுதிதேர்வு நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 94,000 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கபட்டுள்ளது.மேலும் இச்சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். அப்படி இருக்கும் நிலையில் இன்னும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்காமல் இருப்பதை சமத்துவ மக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளை 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் என பள்ளிகல்விதுறை செயலருக்கும், ஆசிரியர்தேர்வுவாரியத்திற்கும் அறிவுறுத்தியுள்ளது. எனவே பாதிக்கபட்ட 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து நடப்பு காலிப்பணியிடங்களை அவர்களை கொண்டு நிரப்பி பணியாணை வழங்கிட வேண்டும். மேலும் அவர்களுக்கு ஒரு வாரத்தில் பணி வழங்குகிறேன், ஒரு மாதத்தில் பணி வழங்குகிறேன் என வெற்றறிக்கைதராமல், வேலையை தந்திட நடவடிக்ககைளை மேற் கொள்ளவேண்டும். நான்காண்டுகளாக போராட்டங்களை நடத்தி வரும் 2013 ஆசிரியர்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீரை துடைத்து முதல்வர் தனிகவனம் செலுத்தி, அவர்களுக்கு பணியாணை வழங்கிட வேண்டும்.
திரு. சரத்குமார்
தலைவர்
சமத்துவ மக்கள் கட்சி