CBSE - 10ம் வகுப்பு தேர்வு இன்று மாலை வெளியாகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2018

CBSE - 10ம் வகுப்பு தேர்வு இன்று மாலை வெளியாகிறது

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி நடந்த 10ம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று சிபிஎஸ்இ தலைவர் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு மா ர்ச் மாதம் 5ம் தேதி தொடங்கியது.
ஏப்ரல் 4ம் தேதி தேர்வுகள் முடிந்தன. இந்த தேர்வுடன் 12ம் தேர்வும் நடந்தது. இரண்டு தேர்விலும் நாடு முழுவதும் 28 லட்சம் பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அவர்களில் 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கும் போது கணக்கு பாடத்தின் கேள்வித்தாள் வெளியானதாக ஒரு புகார் எழுந்தது. அது குறித்து டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில் அது வதந்தி என்று தெரியவந்தது.

இதையடுத்து திட்டமிட்ட தேதியில்  பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டெல்லியில் உள்ள சிபிஎஸ்இ தலைமை அலுவலகம் அறிவித்து இருந்தது. நேற்று முன்தினம் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை     அறிவித்தது. இதையடுத்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று மாலை 4 மணிக்கு சிபிஎஸ்இ இணைய தளத்தில் வெளியிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

இது குறித்து சிபிஎஸ்இ தலைவர் அனிஸ் ஸ்வரூப் நேற்று தெரிவித்தார்.  கடந்த ஆண்டு போல அல்லாமல் இணைய தளத்தில் மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை சிபிஎஸ்இ இணைய தளத்தில் பதிவு செய்து மதிப்பெண்களுடன்கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி