Flash News: நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு நிதி உதவி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2018

Flash News: நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு நிதி உதவி

நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு அரசு செலவில் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்கள் மூலம் ரூ.1000 நிதி உதவி வழங்கபடும் என்று தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வுக்காக நுழைவுத் சீட்டு, அடையாள அட்டையை காட்டி மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு ராஜஸ்தான், கேரளா போன்ற வெளிமாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாளை மறுதினம் காலை 8.30 மணிக்க நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில், நாளைக்கே நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டியது கட்டாயம். ஆகையால் தற்போது தமிழக அரசு மாணவர்களுக்கு நிதி உதவி அறிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி