கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில் குளறுபடி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2018

கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில் குளறுபடி?

தமிழகத்தில் கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில்,ஏராளமானகுளறுபடிகள் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.கல்வித்துறையில் டி.இ.ஓ., நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், இருக்கை கண்காணிப்பாளர்.

உதவியாளர், இளநிலை உதவியாளர் உட்பட 7000க்கும் மேற்பட்ட ஆசிரியர் அல்லாத பணியாளர் உள்ளனர். இவர்களுக்கு காலி பணியிடங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வு வழங்கப்படும்.இதற்காக ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் பதவி உயர்வு, பணி மூப்பு பட்டியல் தயாரித்து வெளியிடப்படும்.இந்தாண்டுக்குரிய பட்டியல் 15.3.2018 வெளியிடப்பட்டது. இதில் பல குளறுபடிகள் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து கல்வி அலுவலர்கள் கூறியதாவது:பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில் 2017ல் இடம் பெற்றிருந்த பலரின் பெயர் 2018 பட்டியலில் இடம்பெறவில்லை. மேலும் முன்னுரிமைபட்டியலில் பெயர் இடம் பெற தகுதியாக 2017ல் துறைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற நாள் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்தாண்டு பணிவரன்முறை செய்யப்பட்ட நாள் தகுதியாக எடுக்கப்பட்டது.

பதவி உயர்வு மற்றும் பணி மாறுதலின்போது 'விருப்பம் இல்லை,' என எழுதி கொடுத்தவர் பெயரை மூன்று ஆண்டுகள் வரை பட்டியலில் சேர்க்க கூடாது.ஆனால் ஒன்று, இரண்டு ஆண்டுகளே ஆன பலரின் பெயர் பணிமூப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதுபோன்ற குளறுபடிகளை நீக்கி பதவி உயர்வு வழங்க வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி