கலைவானர் அரங்கம் அருகே இருந்து புறப்பட்ட அவர்கள் வாலாஜா சாலையில் அரசு விருந்தினர் மாளிகை வழியாக தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து அரசு விருந்தினர் மாளிகை அருகே சாலையில் அமர்ந்து இந்திய மாணவர் பெருமன்றத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தை அடுத்து தலைமை செயலகம் செல்லும் அனைத்து சாலைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். தடைகளை மீறி போராட்டக்காரர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிடாதபடி போலீசார் சாலைகளில் தடுப்புகளை வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர். தடையை மீறி உள்ளே சென்ற மாணவர் பெருமன்றத்தினர் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
neet must be compulsory otherwise no school will teach the proper full lesson in the higher secondary examination, there should be state level entrance test for engineering and arts and science course too. simply giving too much importance to board examinations won't help the students to acquire more knowledge.
ReplyDelete