'மதிய உணவு திட்டத்துக்கு சரியான தகவல் தேவை' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2018

'மதிய உணவு திட்டத்துக்கு சரியான தகவல் தேவை'

'மதிய உணவு திட்டத்தில் பயனடையும் மாணவர்களின் சரியான எண்ணிக்கையை, ஒவ்வொரு மாதமும் அளித்தால் தான், நிதியுதவி வழங்கப்படும்' என, மாநிலங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் நிதிஉதவியின் கீழ், மாநில அரசு பள்ளிகளில், மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

எண்ணிக்கை

மாநில அரசு அளிக்கும் மாணவர் எண்ணிக்கையை வைத்து, நிதிஉதவி அளிக்கப்படுகிறது. ஆனால், மதிய உணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியாததால், சராசரி எண்ணிக்கையை, மாநில அரசுகள் அனுப்பி, அதிகஅளவு நிதியை பெறுகின்றன.

இது குறித்து, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:மதிய உணவு திட்டத்தின் கீழ் பெறப்படும் நிதியில், முறைகேடுகள் நடப்பதை தடுக்க, இந்த திட்டத்தில், மாணவர்களுக்கு, 'ஆதார்' எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மதிய உணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரிந்துவிடும்.ஒவ்வொரு மாதமும், மாணவர்களின் எண்ணிக்கையை, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில், நிதி வழங்கப்படும்.

நடவடிக்கை

மேலும், மதிய உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்த, சமூக தணிக்கை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உள்ளூர் மக்கள் அடங்கிய குழு, மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்யும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி