BE - சிறப்பு பிரிவு கவுன்சலிங் இன்று துவக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2018

BE - சிறப்பு பிரிவு கவுன்சலிங் இன்று துவக்கம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு பிரிவுக்கான இன்ஜினியரிங் (பிஇ) கவுன்சலிங் இன்று தொடங்குகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் கலந்தாய்வு இணையதளம் மூலம் நடக்கிறது.
கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுள்ள 1,04,453 பேருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூன் 28ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.


இந்நிலையில் இன்று முதல் ஜூலை 8ம் தேதி வரை சிறப்புப்பிரிவின்கீழ் 3 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும், காலை 10.30 மணிக்கு கேட்கும் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கும், பகல் 12 மணிக்கு ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பிற்பகல் 1.30 மணிக்கு நடத்தல் பிரச்னை உள்ளவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. மற்றவர்களுக்கு நாளையும் கலந்தாய்வு நடக்க உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி