
மூன்று குக்கிராமங்களை சேர்ந்த மாணவ - மாணவியர், போதிய போக்குவரத்து வசதியில்லா காரணத்தால், துாரம் அதிகமாக உள்ளதால், பள்ளிக்கு வர சிரமப்பட்டனர்.
பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், ஆசிரியர்கள் பால்ராஜ், கோமதி உள்ளிட்ட ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன், நடப்பாண்டு வேன் ஏற்பாடு செய்து, தினமும், 60க்கும் மேற்பட்ட மாணவர்களை, கிராமங்களிலிருந்து பள்ளிக்கு அழைத்து வருகிறோம். மாலையில், வீடுகளுக்கு அனுப்பிவைக்கிறோம். இதற்காக, வாரந்தோறும், 4,000 ரூபாய் வரை செலவாகிறது. அதற்கான தொகை, ஆசிரியர் கழகம்மற்றும் ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது.இதனால், கடந்தாண்டு, 200 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, நடப்பாண்டு, 230 ஆக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில், 98 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நடப்பாண்டு, 100 சதவீத மாணவர்களை தேர்ச்சியடைய வைப்பதே நோக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.
விரைவில் பஸ் இயக்க எம்.எல்.ஏ., நினைப்பாரா? :
ஆசிரியர்கள் கூறியதாவது:மாணவர்களை, எங்கள் பள்ளியில்சேர்க்க, கிராமங்களுக்கு சென்றபோது, பஸ் வசதியில்லாததால், வர முடியவில்லை என்றனர்.
அதனால், மேட்டூர், எம்.எல்.ஏ., செம்மலையை சந்தித்து, பள்ளிப்பட்டியிலிருந்து, சந்தைதானம்பட்டி வழியாக, டவுன் பஸ் இயக்க, கோரிக்கை விடுத்தோம். அவர், நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன்படி, பஸ் இயக்கப்படும் வரை, மாணவ - மாணவியரை, வேனில் அழைத்துவர முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி