''அரசு பள்ளிகளில், நடப்பாண்டு ஒரு லட்சத்துக்கு மேல், மாணவர்கள் கூடுதலாக சேர்க்கையாகி உள்ளனர்.
புதியபாடத்திட்டத்தால், ஏராளமான பெற்றோர், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வந்துள்ளனர்,'' என, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே கூகலுார், காந்தி கல்வி நிலையத்தில், ஸ்மார்ட் கிளாஸ் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை அடுத்தாண்டு சீருடைகள் மாற்றி அமைக்கப்படும்.தமிழை பாதுகாக்க வேண்டும். தமிழோடு சேர்ந்து, சிறப்பாக ஆங்கிலம் கற்றுத்தர வேண்டும் என, இந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. உங்களை பாதுகாக்கும் அரசாக இருக்கும். ஒன்பதுமுதல் பிளஸ் 2 வகுப்பு வரை, அனைத்தும் கணினி மயமாக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒரு வகுப்பில் மட்டுமே, ஆங்கில வழிக்கல்வி போதிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது கூடுதலாக மாணவர்கள் எண்ணிக்கைஇருந்தால், 50 சதவீதம்ஆங்கிலம் கற்றுத்தர வகுப்பறையை உருவாக்க, அரசு ஆணை பிறப்பித்துள்ளது.அரசு பள்ளிகளில், நடப்பாண்டு ஒரு லட்சத்துக்கு மேல், மாணவர்கள் கூடுதலாக சேர்க்கையாகி உள்ளனர். புதிய பாடத்திட்டத்தால், ஏராளமான பெற்றோர், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வந்துள்ளனர்.
இதுவரை, ஆங்கில வழிக்கல்வியில் பயில்வோருக்கு ஊக்கத்தொகை வழங்கி வந்தோம். அதை மாற்றி, தமிழ் வழியில் பயிலும் சிறந்த, 960 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.உயர்நிலைப்பள்ளி மாணவனுக்கு, 10 ஆயிரம் ரூபாய், மேல்நிலைப்பள்ளி மாணவனுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதியபாடத்திட்டத்தால், ஏராளமான பெற்றோர், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வந்துள்ளனர்,'' என, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே கூகலுார், காந்தி கல்வி நிலையத்தில், ஸ்மார்ட் கிளாஸ் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை அடுத்தாண்டு சீருடைகள் மாற்றி அமைக்கப்படும்.தமிழை பாதுகாக்க வேண்டும். தமிழோடு சேர்ந்து, சிறப்பாக ஆங்கிலம் கற்றுத்தர வேண்டும் என, இந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. உங்களை பாதுகாக்கும் அரசாக இருக்கும். ஒன்பதுமுதல் பிளஸ் 2 வகுப்பு வரை, அனைத்தும் கணினி மயமாக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒரு வகுப்பில் மட்டுமே, ஆங்கில வழிக்கல்வி போதிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது கூடுதலாக மாணவர்கள் எண்ணிக்கைஇருந்தால், 50 சதவீதம்ஆங்கிலம் கற்றுத்தர வகுப்பறையை உருவாக்க, அரசு ஆணை பிறப்பித்துள்ளது.அரசு பள்ளிகளில், நடப்பாண்டு ஒரு லட்சத்துக்கு மேல், மாணவர்கள் கூடுதலாக சேர்க்கையாகி உள்ளனர். புதிய பாடத்திட்டத்தால், ஏராளமான பெற்றோர், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வந்துள்ளனர்.
இதுவரை, ஆங்கில வழிக்கல்வியில் பயில்வோருக்கு ஊக்கத்தொகை வழங்கி வந்தோம். அதை மாற்றி, தமிழ் வழியில் பயிலும் சிறந்த, 960 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.உயர்நிலைப்பள்ளி மாணவனுக்கு, 10 ஆயிரம் ரூபாய், மேல்நிலைப்பள்ளி மாணவனுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி