நாட்டின் 72-வது சுதந்திர தின விழா - முதல்வர் வாழ்த்துச்செய்தி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2018

நாட்டின் 72-வது சுதந்திர தின விழா - முதல்வர் வாழ்த்துச்செய்தி!


இந்தியாவை வல்லரசாக்கவும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்கவும் அனைவரும் உழைக்க வேண்டும் என சுதந்திர வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 72-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் விடுதலைப் போராட்ட தியாகிகளைப் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அவர்களின் பிறந்தநாள் அன்று தமிழக அரசின் சார்பில் விழா கொண்டாடப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவை வல்லரசாக்கவும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றவும் அனைவரும் சாதி, மதங்களை கடந்து உழைக்க வேண்டும் என முதலமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.  

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி