எங்களுக்கு பணம் வேண்டாம், உணவு மட்டும் கொடுங்கள் - கேரள மக்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2018

எங்களுக்கு பணம் வேண்டாம், உணவு மட்டும் கொடுங்கள் - கேரள மக்கள்!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள்எ ங்களுக்கு பணம் வேண்டாம், உணவு மட்டும் கொடுங்கள் என வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
கேரளாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 2,23,000 பேர் 1568 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தத்தளித்து வருகிறார்கள், அவர்களை மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். வெள்ளத்தினால் மக்கள் அனைத்தையும் இழந்து, முகாம்களில் தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவியை மாநில அரசு செய்து வருகிறது. உதவிகளை வழங்குமாறும் கேரள அரசு கோரிக்கையை விடுத்துள்ளது, மக்கள் உதவியை வழங்கிவருகிறார்கள். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அலுவாவில் உள்ள மக்கள் தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்குமாறு கோரிக்கையை விடுத்துள்ளார்கள்.எங்களுக்கு உணவும், தங்கிமிடுமும் கொடுங்கள் என்று அதிகாரிகளிடம் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

 “எங்களுக்கு பணம் வேண்டாம், எங்களுக்கு உணவு போதும். கடந்த 72 மணி நேரங்களாகமக்களுக்கு சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை,” என்று உள்ளூரை சேர்ந்த சராவுதீன் வேதனையுடன் கூறியுள்ளார். வெள்ளம், நிலச்சரிவு காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி