முதுகலை ஆசிரியர்களுக்கான 3 நாட்கள் 'நீட்' பயிற்சி, நாளை (செப். 10) முதல் துவங்குகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்காக, 'நீட்' தேர்வுக்கான பயிற்சியை அரசு அளிக்கிறது. இதற்காக, முதற்கட்டமாக 412 மையங்கள் துவங்கப்பட்டு உள்ளன. இவற்றில், மாணவர்களுக்கான ஆலோசனைகள் வழங்குதல் தொடர்பாக, முதுகலை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
நாளை முதல், செப். 12 வரையிலான முகாமில், அரசு, உதவிபெறும் பள்ளிகளின் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். அக்கரைப்பட்டி எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரியில் நடக்க உள்ள பயிற்சியில், ஒருவர்கூட விடுபடாமல் பங்கேற்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி