''நவ., 27 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்,'' என, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர், தியாகராஜன் கூறினார்.
தலைமை செயலகத்தில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பல கட்ட போராட்டம் நடத்தியும், எங்களின் கோரிக்கைகளை அரசு கண்டு கொள்ளவில்லை. எனவே, நவ., 27 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அக்., 4ல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுக்க உள்ளோம். காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு, சேலத்தில், அக்., 13ல் நடத்தப்படும், என்றார்.
தனியார் பள்ளியில் 25% மாணவர் சேர்க்கைக்கு அரசு வழங்கும் மானியத்தை ரத்து செய்து அந்த மாணவர்களை அரசு பள்ளியில் சேர்த்து அந்த நிதியை அரசு பள்ளிக்கே ஒதுக்க வேண்டும்.
ReplyDelete