பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் வினியோகிக்க வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' எனும் அடையாள அட்டை வழங்கும் நோக்கில், 2012ல், பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளம் உருவாக்கப்பட்டது.இதில், தகவல்களை திரட்டி தொகுப்பதில், சிக்கல் நீடித்ததால், மேம்படுத்தப்பட்ட எமிஸ் இணையப்பக்கம் சமீபத்தில் உருவாக்கப்பட்டது.பள்ளிகளின் தகவல் பலமுறை சரிபார்க்கப்பட்ட பின், தற்போது ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
பார்கோடு இணைத்து, மாணவர்களின் பெயர், பள்ளி பெயர், முகவரி, ரத்த வகை உள்ளிட்ட அடிப்படை தகவல்களுடன் அச்சிட, தற்போது டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், விரைவில் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'மூன்றாம் பருவத்துக்கு, புதிய சீருடை வழங்கப்படும். இதனுடன், அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 'டெண்டர் கோர, அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், விரைவில் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படும்' என்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி