நர்சிங் மாணவர் சேர்க்கை: காலஅவகாசம் நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2018

நர்சிங் மாணவர் சேர்க்கை: காலஅவகாசம் நீட்டிப்பு


நர்சிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலஅவகாசத்தை, டிச., 31ம் தேதி வரை நீட்டித்து, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அறிவித்துள்ளது.

பி.எஸ்சி., நர்சிங், பி.பி.பி.எஸ்சி., நர்சிங், எம்.எஸ்சி., நர்சிங் ஆகிய அனைத்து படிப்புகளுக்கும் நவ., 30ம் தேதி வரை மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது, இந்தியன் நர்சிங் கவுன்சில் அறிவுறுத்தலின்படி, இக்காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல்கலை விதிமுறைகளின்படி, பருவத்தேர்வுகளுக்கு முன் மாணவர்களின் வருகை பதிவு விதிமுறை சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி