அரசு ஊழியர்களுடன் பேச்சு நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2019

அரசு ஊழியர்களுடன் பேச்சு நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன்  பேச்சுவார்த்தை  நடத்தி அரசு உரிய தீர்வு காண வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுவதால் மாணவர்கள், பொது மக்கள் பாதிக்கப்படுவதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு உடனடி பேச்சுவார்த்தை  நடத்திட வேண்டும்.ஆசிரியர்களின் போராட்டத்தால் பல பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு மாணவர்களின் கல்வி கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆங்காங்கே சில இடங்களில் மாணவர்களும், சில இடங்களில் மாணவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபடக்கூடிய  சூழல் ஏற்பட்டுள்ளது.அதே போல அரசு ஊழியர்களின் போராட்டத்தால் பொது மக்களுக்கான அன்றாடப் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் கைது செய்யும் நடவடிக்கை  மேற்கொண்டது ஏற்புடையதல்ல. இதற்கு பதிலாக அரசு ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி