10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் , பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை - தேர்வுத்துறை அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2019

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் , பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை - தேர்வுத்துறை அறிவிப்பு!


10 மற்றும், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு பணிகள் தொடர்பான கையேட்டை அரசு தேர்வுகள் இயக்ககம், தேர்வு அலுவலர்களுக்கு வழங்கி உள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

# தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் அன்றைய பாடத்தை போதிக்கும் ஆசிரியர்களாக இல்லாததை உறுதி செய்ய வேண்டும்.

# அடையாள அட்டை இல்லாமல் யாரும் தேர்வு மையத்தில் பணிபுரிய கூடாது.

# வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

# பொதுவாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் காலையில் மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை விடப்படும். இந்தநிலையில் எஸ்.எஸ்.எல்.சி. மொழி பாடங்களுக்கான(தமிழ் மற்றும் ஆங்கிலம்) தேர்வு பிற்பகலில் நடைபெறுவதால் அந்த 4 தினங்களுக்கும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு முழு நாளும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

# தேர்வுகள் நடைபெறும்போது தேர்வு மைய பள்ளிகளில் கட்டிட பணியோ, பராமரிப்பு பணியோ நடைபெற கூடாது. இதுபோன்ற அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி