ஜாக்டோ-ஜியோ போராட்டத் தின்போது பகுதிநேர ஆசிரியர்கள் கூடுதலாக பணிபுரிந்த வேலை நாட்களை மாற்று விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் - பள்ளிக்கல்வித் துறை உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2019

ஜாக்டோ-ஜியோ போராட்டத் தின்போது பகுதிநேர ஆசிரியர்கள் கூடுதலாக பணிபுரிந்த வேலை நாட்களை மாற்று விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் - பள்ளிக்கல்வித் துறை உத்தரவு!


ஜாக்டோ-ஜியோ போராட்டத் தின்போது பகுதிநேர ஆசிரியர்கள் கூடுதலாக பணிபுரிந்த வேலை நாட்களை மாற்று விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ஜாக்டோ- ஜியோ சார்பில் கடந்த 22 முதல் 30-ம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தபோராட்டத்தில் 2 லட்சம் ஆசிரியர்கள் வரை பங்கேற்றதால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டது.

இதையடுத்து பகுதிநேர ஆசிரியர்களை கொண்டு பள்ளிகளை இயக்கி நிலைமையை தமிழக அரசு சமாளித்தது. இதற்கிடையே பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதத்துக்கு 6 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாகும். ஆனால், போராட்டத்தின் போது தங்கள் வேலை நேரத்தை தாண்டி பெரும்பாலான பகுதிநேர ஆசிரியர்கள் கூடுதலாக பணிபுரிந்தனர். அவ்வாறு வேலை செய்த நாட்களுக்கு மாற்று விடுப்பு வழங்க கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது பகுதிநேர ஆசிரியர்கள் கூடுதலாக பணிபுரிந்த வேலை நாட்களை 6 மாத காலத்துக்குள் மாற்று விடுப்பாக எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி