பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு, செய்முறை தேர்வுக்கான தேதி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2019

பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு, செய்முறை தேர்வுக்கான தேதி அறிவிப்பு


பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு, செய்முறை தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனி தேர்வர்கள், அறிவியல் பாடத்துக்கு, செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும். இதுதொடர்பான பயிற்சி வகுப்புகள், தனி தேர்வர்களுக்கு ஏற்கனவே, அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டுள்ளன.

எந்தப் பள்ளியில் பயிற்சி வகுப்பு நடந்ததோ, அந்த பள்ளியிலேயே செய்முறை தேர்வும் நடத்தப்படும். வரும், 26 முதல், 28ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடக்கும். எனவே, தேர்வுக்கு விண்ணப்பித்த தனி தேர்வர்கள், தங்களுக்குரிய பள்ளிகளை அணுகி, தலைமைஆசிரியரிடம், செய்முறை தேர்வு குறித்த தகவலை பெற்று பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி