ஐகோர்ட் உத்தரவு!
சென்னை:'நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததற்காக, ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கோவை மாவட்டம், உப்பிலியாபாளையத்தை சேர்ந்தவர், ஆர்.கணேசன். அரசு போக்குவரத்து கழகத்தில், டிரைவராக பணியாற்றி, 2018 செப்டம்பரில் ஓய்வு பெற்றார்.சம்பளத்துடன் கூடிய விடுமுறைக்கான ஊதியம் வழங்க கோரி, 2018 ஜனவரியில், உயர் நீதிமன்றத்தில், இவர் தாக்கல் செய்த மனு, நிலுவையில் உள்ளது.
பணி ஓய்வுக்கு பின், ஓய்வூதிய பலன்கள் வழங்கும்படி, போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கு மனு அனுப்பினார். எந்த நடவடிக்கையும் இல்லை.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில், கணேசன் மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி, எஸ்.விமலா விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
உரிமைகள் கேட்டு, நீதிமன்றத்தை நாடுவது, ஒருவரது அடிப்படை உரிமை. அதற்காக, ஊழியருக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது. ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைப்பதில், எந்த நியாயமும் இல்லை.
ஓய்வூதிய பலன்கள் வழங்க கோரி, மனுதாரர் மனுவும் அளித்துள்ளார்.எனவே, ஒன்பது மாத தவணைகளில், ஓய்வூதிய பலன்களை அளிக்கும்படி, கோவை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிடப்படுகிறது. முதல் தவணை, இம்மாதத்தில் இருந்து துவங்கப்பட வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 03.02.2019
https://www.dinamalar.com
நல்லதுடா இப்படியே ஒவ்வொருத்தரும் கோர்ட்டுக்கு போய் தான் வாங்கனுமாம் அந்த டிரைவர போய் கேளுங்க எவ்வளவு மன உளைச்சல் அடைந்திருபார் இந்த 9 மாசமாய்,இவருக்காக பணியில் உள்ளவர்கள் போராடினால் குற்றமா தற்காலிக டிரைவர் பணியின் தெரியும் தானே அவரின் பாவம் சும்மா விடாது!
ReplyDeleteபசு மாட்டு முத்திரத்தை தெளித்து யாகம் வளர்த்து,கலர் கலரா கயிறை கட்டி பாவத்தை போக்கு வாங்க.......பொறம்போக்கு நாய்ங்க......
Deleteஒரு ஜனநாயக நாட்டில் தனி மனிதனின் வாழ்வாதாரப் பிரச்சனைக்கே இத்தனை தூரம் போராட வேண்டியிருக்கிறதென்றால் எப்படி வாழ்க்கையை எவ்வளவு கடினமானதாக இருக்கும்? எவ்வளவு மன உளச்சல். இத்தனை அலைகழிப்பு, மன உளச்சல் இதற்க்கு சேர்த்து அந்த போக்கு வரத்து கழகத்திற்கு அபராதம் விதித்து தண்டனை வழங்க வேண்டும்.
DeleteFebruary 3, 2019 at 1:38 PM
ReplyDeleteநல்லதுடா இப்படியே ஒவ்வொருத்தரும் கோர்ட்டுக்கு போய் தான் வாங்கனுமாம் அந்த டிரைவர போய் கேளுங்க எவ்வளவு மன உளைச்சல் அடைந்திருப்பார் இந்த 9 மாசமாய்,இவருக்காக பணியில் உள்ளவர்கள் போராடினால் குற்றமா தற்காலிக டிரைவர் பணியின் லட்சனம் தெரியும் தானே அவரின் பாவம் சும்மா விடாது!
நீங்கள் போராடுவது முட்டாள்களிடம்
ReplyDeleteஉண்மை...
DeletePoratam panna intha kolakara kammanatinga police vachi sudavum thayangamattanga , kolagara sunni pasanga
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete