ஐ.ஆர்.சி.டிசி. வலைதளம் கொண்டு ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சில சமயங்களில் தவறு செய்வது இயல்பான ஒன்று தான். இவ்வாறு தவறு செய்வோருக்கு சவுகரியமான அம்சம் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டை வேறு யாருக்கேனும் மாற்றிக் கொடுக்க வேண்டுமா?
ஐ.ஆர்.சி.டி.சி. அதன் பயனர்களுக்கு அவர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டை மற்றவர்களுக்கு மாற்றிக் கொடுக்கும் வசதியை வழங்குகிறது. எனினும், இந்த வசதியை பயனர்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம். முன்பதிவு செய்த டிக்கெட்
1 - நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டினை பிரின்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2 - இனி உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும்.
3 - ரெயில் டிக்கெட் முன்பதிவு மையத்திற்கு செல்லும் போது மாற்ற வேண்டிய பயணியின் அடையாள சான்று மற்றும் அதன் ஜெராக்ஸ் ஒன்றையும் எடுத்து செல்ல வேண்டும்.
4 - இனி டிக்கெட் முன்பதிவு மையத்தின் அதிகாரியிடம் பயணியின் பெயரை மாற்றித் தர கேட்க வேண்டும். குறிப்பு: இவ்வாறு செய்ய பயனர் டிக்கெட் முன்பதிவு மையத்திற்கு ரெயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக செல்ல வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி