மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உதவி உபகரணங்களை வழங்கினார்: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2019

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உதவி உபகரணங்களை வழங்கினார்: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா



புதுக்கோட்டை,மார்ச்.2:  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி புதுக்கோட்டை  மாவட்டத்தின் சார்பாக 6 முதல் 14 வயது வரையுள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான  உதவி உபகரணங்கள் வழங்கும் விழா மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.   

 விழாவிற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  இரா.வனஜா தலைமை வகித்து மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கினார்.

 விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர்(பொ)     மு.மாரிமுத்து, உதவித்திட்ட  ஒருங்கிணைப்பாளர்      இரவிச்சந்திரன்  ,மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சி. பழநிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 336 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன .

முதற்கட்டமாக 21 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சக்கர நாற்காலி, மூளை முடக்குவாத நாற்காலி ,காதோலி கருவி, மூன்று சக்கர வண்டி, உள்ளிட்ட 30 உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

விழாவில் பள்ளித் துணைஆய்வாளர் ஜெயராமன்,மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள்,பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், சிறப்பாசிரியர்  பாஸ்கர், இராஜகுமாரி, அமலாசெல்வக்குமாரி ,  இராஜேஸ்வரி , ஜெபமாலை மேரி, தேவிகா,     ஆரோக்கிய குளோரி, பேபி, ஆகியோர் செய்திருந்தனர்.

2 comments:

  1. More important pudukkottai DT CEO avl vanaja madam news, weekly any one news posted OK welcome. Also gathered posted other DT CEO news so admin give more important other dt

    ReplyDelete
  2. ஆமாம் சேலம் மாவட்ட ஆட்சியர் போல

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி