வருமான வரி தாக்கல்: அதிகாரிகள் எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2019

வருமான வரி தாக்கல்: அதிகாரிகள் எச்சரிக்கை


'கடந்த, 2017 - 18ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை, நடப்பு ஆண்டில் தாக்கல் செய்யாவிட்டால், எப்போதும் தாக்கல் செய்ய முடியாது' என, வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ள அனைவரும், ஆண்டு தோறும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது அவசியம். இதன்படி, 2017- 18க்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, வரும், 31ம் தேதி கடைசி நாள்.வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 2017 - 18ம் ஆண்டுக்கான, வருமான வரி கணக்கை, வரும், 31ம் தேதிக்குள் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கும், 10 ஆயிரம் ரூபாய்அபராதம் செலுத்த வேண்டும்.

தற்போது, கணக்கு தாக்கல் செய்யாவிட்டால், இனி, எப்போதும் செய்ய முடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு சேர்த்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அளிக்கப்பட்ட அனுமதி, நிறுத்தப்பட்டு விட்டது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி