எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2019

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜன.21-ஆம் தேதி முதல் ஜன.25-ஆம் தேதி வரை தனித் தேர்வர்களுக்கு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.  இதற்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) மாலை 5 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.

www.dge1.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தங்களது பதிவெண்,  பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவுசெய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம்.மேலும் தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி