TNPSC - குரூப் 4 தேர்வுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 26, 27ம் தேதி நடக்க உள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2019

TNPSC - குரூப் 4 தேர்வுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 26, 27ம் தேதி நடக்க உள்ளது.


கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 26, 27ம் தேதி நடக்க உள்ளது.

 டிஎன்பிஎஸ்சி தொகுதி 4-இல் அடங்கிய காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்தாண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி நடத்தப்பட்டது.அதற்கான தோ்வு முடிவுகள் (தரவரிசைப் பட்டியல்) ஜூலை 30-ல் வெளியிட்டது.    அதனைத் தொடா்ந்து தரவரிசை மற்றும் இனசுழற்சி அடிப்படையில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய விண்ணப்பதாரா்களின் விவரங்களும் தோ்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.இதையடுத்த சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர், தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, வரும் 26 மற்றும் 27ம் தேதியில் விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.  

சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகியவற்றில் பங்கேற்காதவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றும் மறுவாய்ப்பு எதுவும்வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    இது தொடர்பான முழுமையான விபரங்களை டிஎன்பிஎஸ்சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.tnpsc.gov.in தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி