பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வுக்கு, தனி தேர்வர்கள், தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் - தேர்வுத்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2019

பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வுக்கு, தனி தேர்வர்கள், தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் - தேர்வுத்துறை


'பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வுக்கு, தனி தேர்வர்கள், தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வைஎழுத விரும்பும் தனி தேர்வர்கள், மார்ச் தேர்வுக்கு விண்ணப்பிக்காவிட்டால், அவர்கள், ஜூன்,துணை தேர்வில் பங்கேற்கலாம் என, சலுகை வழங்கப்பட்டது. இந்த தனி தேர்வர்கள், ஏப்., 8 முதல், 12க்குள் விண்ணப்பிக்க அவகாசம் தரப்பட்டது.

அதிலும் விண்ணப்பிக்காதவர்கள், தத்கல் சிறப்பு சலுகை திட்டத்தில், கூடுதல் கட்டணத்துடன், வரும், 15 மற்றும் 16ம் தேதி, அரசு தேர்வு துறையின் சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி