உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித் துறை முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2019

உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித் துறை முடிவு.


மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளை களை கட்டாயமாக்க பள்ளிகல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 44 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 1.2 கோடி மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளிக்கல்வித் துறையில் புதியபாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை என பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.இதற்கு பரவலாக வரவேற்புகள் அதிகரித்துள்ள நிலையில்,அனைத்து வகையான பள்ளிகளிலும் உடற்கல்விக்கான முக்கியத்துவம் குறைக்கப்படுகிறது.

இருட்டடிப்பு

உடற்கல்வி பாடவேளைகளில் பிற வகுப்புகளை நடத்துவதால் மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.இதனால் விளையாட்டில் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியாமல் மாணவர்கள் தவிப்பதாக விளையாட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளைகளில் பிற பாடங்கள் கற்பிப்பதை தவிர்த்து, மாணவர்கள் கட்டாயம் விளையாடுவதைஉறுதி செய்ய வேண்டும்.வரும் கல்வி ஆண்டு முதல் இந்த நடைமுறையை அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிகல்வித் துறைஅறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

காலிப் பணியிடங்கள்

இதுதவிர மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பவும், பள்ளிகளுக்கு விளையாட்டு மைதான வசதிகளை ஏற்படுத்தி தரவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

7 comments:

  1. Matra sirappasiriyargal?

    ReplyDelete
  2. Replies
    1. New year il nalla news. Romba magizhchiyaga irukkirathu. Thank you

      Delete
  3. innuma ivanugala nampuringa..ipadisonathan election la vote u poduvanganu..

    ReplyDelete
  4. innuma ivanugala nampuringa..ipadisonathan election la vote u poduvanganu.. ena sonalum election la inime onum nadakathu..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி