அரசு பள்ளிகள் ஜூன் 10ம் தேதி திறக்கப்படும் - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2019

அரசு பள்ளிகள் ஜூன் 10ம் தேதி திறக்கப்படும் - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு



மக்களவைத் தேர்தலையொட்டி, இந்த ஆண்டு புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு முன்கூட்டியே தேர்வுகள் முடிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 12ஆம்தேதி விடுமுறை விடப்பட்டது.

கோடை விடுமுறை 52 நாட்கள் முடிந்தபிறகு, ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்தது.புதுச்சேரியில் ஜூன் 3ஆம் தேதிக்கு பதில் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி இன்று தெரிவித்துள்ளார்.கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என நாராயணசாமி விளக்கமளித்துள்ளார்.

ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறப்புதமிழ்நாட்டைப் பொறுத்தவரை பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை.முன்னர் அறிவித்தபடி ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. தமிழ்நாட்டில் scientiest SS AC போட்டுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்

    ReplyDelete
  3. Water is not available in many schools. How to solve.

    ReplyDelete
  4. Tamil nadu school appo reopen sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி