சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவு தாமதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2019

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவு தாமதம்


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு, நாடு முழுவதும், மார்ச்சில் முடிந்தது. விடைத்தாள் திருத்தம் முடிந்து, இறுதி கட்ட சரிபார்ப்பு பணிகளும் முடிவுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகும் என, பல தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்டது. தேர்வு முடிவுக்காக, நேற்று காலை முதல், மாணவர்கள் காத்திருந்தனர். ஆனால், 'ரிசல்ட்' வெளியாகவில்லை.

இதையடுத்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என, சி.பி.எஸ்.இ., வாரியம், நேற்று பகலில், அறிவிப்பு வெளியிட்டது. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை குறிப்பிடவில்லை. ஆனால், 'தேர்வு முடிவு வெளியாவதற்கான தேதியை, விரைவில், சி.பி.எஸ்.இ., அறிவிக்கும்' என, அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, பெற்றோர் கூறுகையில், 'மாநில பாடத்திட்டத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப் பட்டு, பிளஸ் 1 சேர்க்கை நடந்து வருகிறது. பல மாணவர்கள், பிளஸ் 1க்கு, மாநில பாடத் திட்டத்துக்கு மாற முடிவு செய்துள்ளனர். 'ஆனால், 10ம் வகுப்பு தேர்வு முடிவு வராததால், பிளஸ் 1 சேர்க்கைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி