தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு இணையதளம் வழியாக மே 29, 30-ல் 25 சதவீத இலவச மாணவர் சேர்க்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2019

தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு இணையதளம் வழியாக மே 29, 30-ல் 25 சதவீத இலவச மாணவர் சேர்க்கை


தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடுக்கான இலவச மாணவர் சேர்க்கை மே 29, 30-ம் தேதிகளில் இணையதளம் வழியாக நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர்.

இதில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.21 லட்சம் இடங்கள் உள்ளன.இதற்கான இலவச மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி மே 18-ல் முடிந்தது. மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே இலவச மாணவர் சேர்க்கையில் பல தனியார் பள்ளிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள்எழுந்தன. மேலும், மாணவர்களை சேர்க்கைக் கட்டணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிகாரிகளின் மேற்பார்வையில்...

இத்தகைய புகார்களை தவிர்க்க தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாண வர் சேர்க்கையை இந்த ஆண்டு முதல் இணையதளம் வழியாக அரசே ஏற்று நடத்த முடிவானது. அதன்படி, நடப்பு ஆண்டு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடுக்கான மாணவர் சேர்க்கை மே 29, 30-ம் தேதிகளில் இணையதளம் வழியாக நடைபெறும். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் சார்பில் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அதற்கு ஏதுவாக விண்ணப்பங்கள்சரிபார்க்கும் பணி மே 28-ம் தேதியுடன் முடிந்துவிடும்.

பள்ளிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கைக்கு குறைவாக விண் ணப்பங்கள் வந்திருந்தால் அனை வருக்கும் சேர்க்கை வழங்கப்படும். கூடுதலாகவிண்ணப்பங்கள் வந்திருந்தால் குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.

4 comments:

  1. School ku antha date la poganuma?

    ReplyDelete
  2. Tell anybody how to selected in identifying

    ReplyDelete
  3. Anyone please tell me whether we have to go school for admission. How do we know the confirmation of admission

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி