தனியார் பள்ளிகள் ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் விற்பனை செய்யக்கூடாது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2019

தனியார் பள்ளிகள் ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் விற்பனை செய்யக்கூடாது!


தனியார் பள்ளிகள் ஸ்கூல் பேக்,லஞ்ச் பேக் விற்பனை செய்யக்கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் விற்ககூடாது. புத்தகங்கள், காலணிகள் விற்கலாம் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கோவை தனியார் பள்ளி ஒன்றின் மீது ஹேமலதா என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், பள்ளி நிர்வாகம், நோட்டு புத்தகங்களுக்கு 5 ஆயிரம், பாடப்புத்தகங்களுக்கு 5 ஆயிரம், ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் என்று வாங்குமாறு நிர்ப்பந்திப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி, '' ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் வாங்குமாறு பெற்றோரை தனியார் பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்த கூடாது. அதேநேரத்தில் பாடப்புத்தகங்கள், நோட்டுகள், காலணிகள் இவற்றை விற்கலாம்,'' என்று கூறி வழக்கை ஜூன் 10 க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி