வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை புள்ளி இரண்டு ஐந்து சதவீதம் குறைத்துள்ள ரிசர்வ் வங்கி இணைய வழிப் பணப் பரிமாற்ற முறைகளான RTGS, NEFT ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்களை நீக்க அறிவுறுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டம் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரெப்போ வட்டி விகிதம் புள்ளி இரண்டு ஐந்து அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5 புள்ளி 5 சதவீதமாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக சக்திகாந்ததாஸ் தெரிவித்தார்.
பணவீக்க விகிதம் நிதியாண்டின் முதல் பாதியில் 3 சதவீதத்தில் இருந்து 3 புள்ளி 1 சதவீதமாகவும், இரண்டாவது பாதியில் 3 புள்ளி 4 சதவீதத்தில் இருந்து 3 புள்ளி 7 சதவீதமாகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.
இணைய வழிப் பணப்பரிமாற்ற முறைகளான RTGS, NEFT ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்களை நீக்கியுள்ள ரிசர்வ் வங்கி, இதன் பலனை வங்கிகள் கடைநிலை நுகர்வோருக்கு சேர்க்க அறிவுறுத்தியுள்ளது.
2 லட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்தை வங்கி அலுவல் நேரங்களில் இணையதளம் மூலம் ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்ற RTGS முறை பயன்படுத்தப்படுகிறது. முன்னதாக வங்கி வேலை நாட்களில் மாலை 4.30 மணி வரை ஆர்டிஜிஎஸ் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாலை ஆறு மணி வரை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஏ.டி.எம். கட்டணங்களை வரைமுறைப்படுத்த வங்கிகளின் தலைமைச் செயலதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைக்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் இக்குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் ஏ.டி.எம் கட்டணங்களையும் ரிசர்வ் வங்கி வரைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி