முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு. தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நடந்தது. தேர்வு வினாக்கள் சற்று எளிதாகவே இருந்தது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2019

முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு. தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நடந்தது. தேர்வு வினாக்கள் சற்று எளிதாகவே இருந்தது.


முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நேற்று நடந்தது. 814 இடங்களுக்கு 30 ஆயிரத்து 833 பேர் போட்டியிடுகிறார்கள்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், காலியாக உள்ள 814 முதுகலை கணினி ஆசிரியர்(கிரேடு-1) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி அறிவித்தது. இதுவரையில் நேர்முக தேர்வு மூலம் கணினி ஆசிரியர்கள் பணி இடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முதல் முறையாக முதுகலை கணினி ஆசிரியர் பணி இடங்களுக்கு ‘ஆன்-லைன்’ முறையில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஜூன் 23-ந்தேதி (நேற்று) தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்வுக்கு 7 ஆயிரத்து 546 ஆண்கள், 23 ஆயிரத்து 287 பெண்கள் என 30 ஆயிரத்து 833 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு எழுதுவதற்கான ‘ஹால்-டிக்கெட்’ கடந்த 17-ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் 119 மையங்களில் முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு நேற்று நடந்தது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. ‘ஹால்-டிக்கெட்’, அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதிய சங்கீதா, சாந்தி ஆகியோர் கூறியதாவது:- தேர்வு சற்று எளிதாகவே இருந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தில் இருந்தே வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன.

10 கேள்விகளுக்கு அளிக்கப்பட்டிருந்த 2 விடைகளும் சரியானது போலவே இருந்தது. மிகவும் புத்திக்கூர்மையுடன் அந்த கேள்வியை அணுக வேண்டியது இருந்தது. நன்கு படித்தவர்களுக்கு தேர்வு முடிவு நிச்சயம் சாதகமாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர். முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு முதல் முறையாக ‘ஆன்-லைன்’ மூலம் நடைபெற்றாலும், கணினி ஆசிரியர் பதவி உயர்வு தேர்வு ஏற்கனவே ‘ஆன்-லைன்’ முறையில் தான் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி