தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்:பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2019

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்:பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்


அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், நல்லாசிரியர் விருதுக்கு ஜூன் 15-ம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ம் தேதி முன்னாள்குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து நல்லாசிரியர் விருது வழங்கி கவுரப்படுத்தி வருகிறது.
அதன்படி 2018-ம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதைப் பெற தகுதியான ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என கடந்த மே 16-ம் தேதி மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.இதுதவிர ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அந்த சுற்றறிக்கையில், ‘‘தேசிய நல்லாசிரியர்விருது -2018 பெற தகுதியான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் ஜூன்15-ம் தேதிக்குள் www.mhrd.gov.in இணையதளத்தில் நேரிடையாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி வரை பணியாற்றி இருக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களும், கல்விஅலுவலகங்களில் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களும் விண்ணப்பிக்கக்கூடாது.

மனிதவள மேம்பாட்டுத்துறை இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றியே விண்ணப்பிக்க வேண்டும். இதுவரைவிண்ணப்பிக்காத ஆசிரியர்கள் ஜூன் 15-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்க வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி