கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 18 ஆயிரம் பேர் விண்ணப்பம்: அடுத்த வாரம் தரவரிசை பட்டியல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2019

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 18 ஆயிரம் பேர் விண்ணப்பம்: அடுத்த வாரம் தரவரிசை பட்டியல் வெளியீடு


கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 18,438 பேர் விண்ணப்பித்துள்ளனர். தரவரிசைப் பட்டியல்அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவஅறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன.

இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும்பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) ஆகியன உள்ளன.கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு 360 இடங்களில் அகில இந்தியஒதுக்கீட்டுக்கு 54 இடங்கள் (15 சதவீதம்) போக மீதமுள்ள 306 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. பி.டெக் படிப்புகளுக்கு மொத்தம் 100இடங்கள் இருக்கிறது. இதில் உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 40 இடங்களில் 6 இடங்கள் (15 சதவீதம்) இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.கூடுதலாக 3,913 பேர்இந்நிலையில் பி.வி.எஸ்சி. -ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2019 - 20 கல்வி ஆண்டுமாணவர் சேர்க்கைக்கு www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிப்பது கடந்த மாதம் 8-ம் தேதி தொடங்கியது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கெடு நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதுவரை பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு 15,666விண்ணப்பங்கள் மற்றும்பி.டெக்படிப்புகளுக்கு 2,772 விண்ணப்பங்கள் என மொத்தம் 18,438 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு 3,559 பேரும், பி.டெக் படிப்புகளுக்கு 354 பேரும் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஜூன் கடைசிவாரத்தில் வெளியிடப்பட உள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி