இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, நாளை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேருவதற்கான கவுன்சிலிங், வரும், 20ம் தேதி துவங்க உள்ளது.
இந்த கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த, 1.33 லட்சம் மாணவர்களுக்கு, அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. ஜூன், 7ல் துவங்கிய இந்த பணி, இன்று முடிவதாக இருந்தது. ஆனால், சில மாணவர்கள் உரிய நேரத்தில் வராத காரணத்தாலும், சிலர் சான்றிதழ்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதாலும், சான்றிதழ் சரிபார்ப்பு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, நாளை வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, உயர்கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் அறிவித்துள்ளார். அதேபோல, கவுன்சிலிங் தொடர்பான சந்தேகங்களுக்கு, 044 - 2235 1014, 2235 1015 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என,அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி